கிறிஸ்தவ கீர்த்தனைகள் பாடலில் எவ்வளவோ சிறந்த பாடல்கள் இருப்பினும் மனதுக்குப் பிடித்தப் பாடல்களின் வரிசையில் முதலில் வருவது “ தேவனே நான் உமதண்டையில்” பாடல் தான். காலங்கள் கடந்தும் இன்றும் மிகச் சிறப்பான கீர்த்தனைப் பாடலாக பலரும் கருதுவது இந்தப் பாடலைத்தான்.
தேவனே, நான் உமதண்டையில் - இன்னும் நெருங்கிச்
சேர்வதே என் ஆவல் பூமியில்.
மாவலிய கோரமாக வன் சிலுவை மீதினில் நான்
கோவே, தொங்க நேரிடினும்
ஆவலாய் உம்மண்டை சேர்வேன்
தென் தமிழக பாரம்பரிய சபைகளில் மிகவும் பிரபலமாக விளாங்கும் பாடல்களில் இதுவும் ஒன்றாகும். உண்மையாகப் பாடலின் பொருளை உணர்ந்து பாடும் பக்தர் எவரும் இப்பாடலை படிக்கும்போதே தேவ பிரசன்னத்தை அனுபவிக்கலாம். அனேகர் இந்தப்பாடலை இய்ற்றியது வேத நாயகம் சாஸ்திரியார் என்று நினைக்கின்றனர். இப்பாடலை இயற்றியவர் சந்தியாகு ஐயர் (புராட்டஸ்டாண்டு சபைகளில் போதகரை ஐயர் என்றுதான் அழைப்பர்) ஆவார். இவர் மதுரை ஜில்லாவில் போதக ஊழியம் செய்துவந்தார்.
பெரும்பாலும் அக்காலத்தில் ஆங்கிலப்பாடல்களின் தமிழாக்கத்தையே பாமாலைகளாகப் பாடினர். இன்றுக் கூட தென் இந்திய திருச்சபைகளில் அவ்வாறுதான் பாடுகின்றனர். ஆங்கிலப்பாடல்களை அப்படியே தமிழில் பாடுவது புதிதாக கேட்பவர்க்கு அன்னியமானதாக இருந்தது. என்னதான் அவற்றின் இராகம் இனிமையானதாக இருந்தாலும் வார்த்தைகளை இழுத்து இழுத்து பாடுவது தமிழ் இசை அறிந்தவர்களுக்கு அவ்வாறு பாடுவதை விட நல்ல தமிழிசையில் பாடினால் நலமாயிருக்கும் என்ற எண்ணம் அப்போதிருந்தே இருந்துவந்தது. ஒரு சிலர் ஆங்கிலப்பாடல்களை பொருள் மாறாது தமிழ் யாப்பிலக்கணத்தின் படி தமிழ் இசையில் இசைத்து தந்தனர். அவர்களில் சந்தியாகு ஐயரும் ஒருவர்.
இப்பாடல் உம்மண்டை தேவனே நான் சேர்வதே என்ற பாடலினை தழுவி இயற்றப்பட்டது ஆகும். இப்பாடலின் மூல பாடல் உம்மண்டை தேவனே யாக்கோபின் வாழ்க்கையை பக்தனின் வாழ்க்கையுடன் இணைத்து பாடும் ஒரு அழகான பாடல் ஆகும்.
இப்பாடலைப் பற்றிய ஒரு உப செய்தி
ஒரு நாள் டிவியில் ஒரு சினிமா பாடல் ஓடிக்கொண்டிருந்தது. அந்த பாடலின் இராகம் எனக்கு நன்கு பரிட்சயமானதாக இருந்தது. அது என்ன என்று யோசித்துப் பார்த்தால் அட அது தேவனே நான் உமதண்டையில் இராகத்தில் அப்படியே எழுதப்பட்டிருந்தது. எனக்கு மிகுந்த ஆச்சரியம்.
இசை ஞானி இளையராஜா என்று போற்றப்படுபவரே இப்படி ஒரு கிறிஸ்தவப்பாடல் இராகத்தை காப்பியடித்துவிட்டாரே என்ற ஆதங்கம் (உள்ளூர சந்தோசம்). அது ரஜினி படம் என்று நினைக்கின்றேன்.
பாடல் பெயர் : தாயும் நானே தந்தையும் நானே
இப்பாடலை இதுவரை கேட்காதவர்கள் ஒரு முறையாவது கேட்டுப் பாருங்கள்.PLEASE CLICK For instrumental of this songஉம்மண்டை தேவனே பாடல் மிகவும் நல்ல பாடல் என்பதில் சந்தேகமில்லை. ஆனால் அதைவிட தேவனே நான் உமதண்டையில் பாடல் மிகவும் சிற்ப்பாக உள்ளது. இது போன்ற தமிழ் பாடல்கள் ஏன் இப்போது வருவதில்லை என்பது வருத்தமாகத்தான் இருக்கிறது.
தேவனே, நான் உமதண்டையில் - இன்னும் நெருங்கிச்
சேர்வதே என் ஆவல் பூமியில்.
மாவலிய கோரமாக வன் சிலுவை மீதினில் நான்
கோவே, தொங்க நேரிடினும்
ஆவலாய் உம்மண்டை சேர்வேன்
1. யாக்கோபைப்போல், போகும் பாதையில் - பொழுது பட்டு
இராவில் இருள் வந்து மூடிட
தூக்கத்தால் நான் சாய்ந்து தூங்கினாலும் என் கனாவில்
நோக்கியும்மை கிட்டிச் சேர்வேன், வாக்கடங்கா நல்ல நாதா!
2. பரத்துக்கேறும் படிகள் போலவே – என் பாதை தோன்றப்
பண்ணும் ஐயா, என்றன் தேவனே,
கிருபையாக நீர் எனக்குத் தருவதெல்லாம் உமதண்டை
அருமையாய் என்னையழைத்து அன்பின் தூதனாகச் செய்யும்
3. நித்திரையினின்று விழித்துக் - காலை எழுந்து
கர்த்தாவே, நான் உம்மைப் போற்றுவேன்;
இத்தரையில் உந்தன் வீடாய் என்துயர்க் கல் நாட்டுவேனே,
என்றன் துன்பத்தின் வழியாய் இன்னும் உம்மைக் கிட்டிச் சேர்வேன்
4. ஆனந்தமாம் செட்டை விரித்துப் - பரவசமாய்
ஆகாயத்தில் ஏறிப் போயினும்
வான மண்டலங் கடந்து பறந்து மேலே சென்றிடினும்
மகிழ்வுறு காலத்திலும் நான் மருவியும்மைக் கிட்டிச் சேர்வேன்
http://www.youtube.com/watch?v=hivsOjzE2N0